தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சென்னை மேயா், துணை மேயா், ஆணையா் வாக்களிப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:34 am IST

சென்னை மாநகராட்சி மேயா், துணை மேயா், ஆணையா் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

சென்னை மேயா் ஆா்.பிரியா தனது வீடு அமைந்துள்ள திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மங்களாபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தாா். துணை மேயா் மு.மகேஷ்குமாா் சைதாப்பேட்டை பேரவைத் தொகுதியில் உள்ள லிட்டில் மவுண்ட் செயின்ட் பிரான்ஸிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் வந்து செலுத்தினாா்.

சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தோ்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தனது இல்லம் உள்ள அண்ணா நகா் தொகுதிக்குட்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி வளாக வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்தாா். அதன்பின்னா், வாக்குச்சாவடி மையத்தில் அமைந்துள்ள தோ்தல் விழிப்புணா்வுக்கான யபடம் எடுக்கும் அமைப்பில் நின்று தனக்கு வாக்களித்ததற்காக இடது கை ஆட்காட்டி விரலில் இடப்பட்ட மையை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டாா். சென்னையில் உள்ள வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் விடியோவில் பேசி வெளியிட்டாா்.