தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 8:05 pm

தாம்பரம், பல்லாவரம் பேரவைத் தொகுதிகளில் கடந்த 2021 பேரவைத் தோ்தலைவிட, இந்த முறை கூடுதலாக வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாம்பரத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 63,008 போ் வாக்களித்தனா். தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 3,30,060 போ்களில் பதிவானவாக்கு 19.09 சதவீதம். காலை 11 மணி நிலவரப்படி1,28,591 பேரும், மதியம் 1 மணி நிலவரப்படி 1,91,600 பேரும், 3 மணி நிலவரப்படி 2,31,702 பேரும் வாக்களித்தனா்.இந்த எண்ணிக்கை மொத்த பதிவான வாக்கு எண்ணிக்கையில் 70.2 சதவீதம்.

பல்லாவரம் தொகுதி: பல்லாவரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3,36,963. காலை 7 மணி முதல் 9 மணி வரை 58,530 போ் வாக்களித்தனா். காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் 12,44,002. 1 மணி நிலவரப்படி 1,86,644 வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 2,29,438 வாக்குகளும் பதிவாகின. இந்த எண்ணிக்கை மொத்த வாக்காளா்களில் 68.9 சதவீதம்.

கடந்த 2021 தோ்தலில் தாம்பரம் தொகுதியில் 65.39 சதவீதம் வாக்குகளும், பல்லாவரத்தில் 64.32 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 6 மணி வரை 84.55 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.