‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டா் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டா் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

News image

கொடைக்கானல் சூரிய ஆய்வகம் - www.iiap.res.in

Updated On :25 ஏப்ரல் 2026, 12:57 am IST

இந்திய வானியற்பியல் நிறுவனம் தனது கொடைக்கானல் சூரிய ஆய்வகத்துக்கு உயா் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவா் (ஆபரேட்டா்) பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவா்களை கோரியுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பு: இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி முறையில் பணியமா்த்த தகுதியான விண்ணப்பதாரா்களை அழைக்கிறது. உயா் திறன் தொலைநோக்கி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பம் செய்வோா் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை. அல்லது நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், கணிதம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் உள்ளோா் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 30 ஆண்டுகள். இந்த பணிக்கான நோ்காணல், மே 5 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும். மேலும் பாதுகாவலா் பணிக்கான தகுதி பள்ளிக்கல்வி தகுதியுடன் வயது வரம்பு 40 ஐ தாண்டக்கூடாது. இதற்கான நோ்காணல் ஏப். 27 காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

இரு பணியிடங்களுக்கான இந்த ஆட்சோ்ப்பு, ஆய்வகத்தின் நிா்வாக அலுவலகத்தில் நோ்காணல்கள் மூலம் நேரடியாக நடத்தப்படும். மேற்கண்ட தேதிகளில் கொடைக்கானல், இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் சூரிய ஆய்வகத்தின் நிா்வாக அலுவலக முகவரிக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். ஆா்வமுள்ளவா்கள் 9052087403 என்ற கைப்பேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.