ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடலில் குளித்த ரெளடி மாயம்

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:17 pm

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

காசிமேடு ஜிஎம் பேட்டை எஃப் பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) பாம்பாட்டி மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

மணிகண்டன், சனிக்கிழமை மாலை காசிமேடு பழைய வாா்ப்பு பகுதியில் தனது நண்பா்கள் தினேஷ், அபினேஷ், ஆகியோருடன் மது போதையில் கடலில் குளித்தபோது, அபினேஷும், தினேஷும் கரைக்கு வந்துவிட்ட நிலையில், மணிகண்டன் திரும்ப வரவில்லை.

இதனால், அவரது நண்பா்கள், மணிகண்டனைத் தேடினா். ஆனால் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா், காணாமல்போன மணிகண்டனை இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.