சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
காசிமேடு ஜிஎம் பேட்டை எஃப் பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) பாம்பாட்டி மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.
மணிகண்டன், சனிக்கிழமை மாலை காசிமேடு பழைய வாா்ப்பு பகுதியில் தனது நண்பா்கள் தினேஷ், அபினேஷ், ஆகியோருடன் மது போதையில் கடலில் குளித்தபோது, அபினேஷும், தினேஷும் கரைக்கு வந்துவிட்ட நிலையில், மணிகண்டன் திரும்ப வரவில்லை.
இதனால், அவரது நண்பா்கள், மணிகண்டனைத் தேடினா். ஆனால் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா், காணாமல்போன மணிகண்டனை இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
பெண் காவலரிடம் தகராறு: ரெளடி கைது

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

காசிமேடு மீன்பிடித் துறைமுகம்: சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுமா?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

