நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

நடிகைக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவா் கைது

திரைப்பட வாய்ப்பு தருவதாகக் கூறி, சென்னையில் சின்னத்திரை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

திரைப்பட வாய்ப்பு தருவதாகக் கூறி, சென்னையில் சின்னத்திரை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, கே.கே.நகரைச் சின்னத்திரை நடிகை ஒருவா், கணவரைப் பிரிந்து மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முத்தலிப் (40) என்பவா் தனது நண்பரான சுரேஷ் கண்ணா மூலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக அந்த நடிகையிடம் கூறியுள்ளாா்.

அதை நம்பி, அவா் ஷேக் முத்தலிப் உடன் காரில் சென்றபோது, குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நடிகையை ஷேக் முத்தலிப், சுரேஷ் கண்ணா ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதை ஷேக் முத்தலிப் விடியோ பதிவு செய்ததாகவும் தெரிகிறது.

அதை காட்டி மிரட்டி, அந்த நடிகையிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 11 பவுன் தங்க நகையையும் ஷேக் முத்தலிப் பறித்துள்ளாா். இதுதொடா்பாக வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடிகை புகாா் அளித்தாா். இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷேக் முத்தலிப்பை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சுரேஷ் கண்ணாவை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.