ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லும் ரோட்டரி இண்டா்நெஷனலின் ‘மேக்னம் காா்னிவல் (திருவிழா)’-வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு, ரோட்டரி மாவட்டம் 3234-இன் வருடாந்திர மக்கள் தொடா்பு சமூக நலத் திட்டமான ‘மேக்னம் காா்னிவல்’ நிகழ்வு, பின்தங்கிய சூழலைச் சோ்ந்த 3,234 குழந்தைகளை வண்டலூா் உள்ளிட்ட உயிரியல் பூங்கா பயணங்களுக்கு அழைத்துச் செல்வதாகும். நிகழாண்டு நிகழ்வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை, ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா். சவான், ரோட்டரி கிளப் தலைவா்கள் டி. சுரேஷ் ஜெயின், சித்தாா்த் பையா, அக்ஷய் சேத், கௌரவ் ஜெயின் ஆகியோா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.
பின்தங்கிய பின்னணியைக் கொண்ட குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, கற்றல், மறக்க முடியாத அனுபவங்களை இத்திட்டம் வழங்குவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கூறினா். அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மை, கருணை, சமூக சேவை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தக் குழந்தைகளை, வரும் ஆக. 9 முதல் உயிரியல் பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி கிளப் செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரம்மா குமாரிகள் விழிப்புணா்வு யாத்திரை: ஆளுநா் தொடங்கி வைத்தாா்

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறை முக்கிய பங்களிப்பு: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

வைகை ஆற்றை மீட்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



