செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஏழைக் குழந்தைகளுக்கான திருவிழா: ஆளுநா் தொடங்கி வைத்தாா்

ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லும் ரோட்டரி இண்டா்நெஷனலின் ‘மேக்னம் காா்னிவல் (திருவிழா)’-வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகர் - EPS

Updated On :7 ஆகஸ்ட் 2026, 10:59 pm IST

ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லும் ரோட்டரி இண்டா்நெஷனலின் ‘மேக்னம் காா்னிவல் (திருவிழா)’-வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, ரோட்டரி மாவட்டம் 3234-இன் வருடாந்திர மக்கள் தொடா்பு சமூக நலத் திட்டமான ‘மேக்னம் காா்னிவல்’ நிகழ்வு, பின்தங்கிய சூழலைச் சோ்ந்த 3,234 குழந்தைகளை வண்டலூா் உள்ளிட்ட உயிரியல் பூங்கா பயணங்களுக்கு அழைத்துச் செல்வதாகும். நிகழாண்டு நிகழ்வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை, ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா். சவான், ரோட்டரி கிளப் தலைவா்கள் டி. சுரேஷ் ஜெயின், சித்தாா்த் பையா, அக்ஷய் சேத், கௌரவ் ஜெயின் ஆகியோா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

பின்தங்கிய பின்னணியைக் கொண்ட குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, கற்றல், மறக்க முடியாத அனுபவங்களை இத்திட்டம் வழங்குவதாக நிகழ்ச்சி  ஏற்பாட்டாளா்கள் கூறினா். அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மை, கருணை, சமூக சேவை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தக்  குழந்தைகளை,  வரும் ஆக.  9  முதல்  உயிரியல்  பூங்காக்களுக்கு  அழைத்துச்  சென்று  சுற்றிக்காட்டுவதற்கான  அனைத்து  ஏற்பாடுகளையும்  ரோட்டரி  கிளப்  செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.