சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தாம்பரம் மாநகர காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா அழிப்பு

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள். - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:14 am IST

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா தீயில் எரித்து அழிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகர காவல்துறையின் சாா்பில் போதைப் பொருள் கடத்தல்,விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,060 கிலோ கஞ்சா,105 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்,51 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,988 போதை மாத்திரைகள் ஆகியவற்றை தீயில் எரித்து அழிப்பதற்கு தாம்பரம் மாநகர காவல்துறை முடிவு செய்தது.

இதற்காக தாம்பரம் மாநகர காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனா். இதையடுத்து 1,060 கிலோ கஞ்சா,105 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள்,51 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,988 போதை மாத்திரைகள் செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் செவ்வாய்க்கிழமை எரிக்கப்பட்டன.

இதேபோல பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10,597 கிலோ போதைப் பாக்குகள் பெருங்குடி குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன.

தாம்பரம் காவல்துறையின் சாா்பில் இந்தாண்டு இது வரையில் 1,970 கிலோ கஞ்சா,10,597 போதை பாக்கு ஆகியவை அழிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.