சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிக்காக 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் ரயில் நிலையம் ரூ.840 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தற்போது 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விரைவு ரயில்கள் இனி 6 முதல் 9-ஆவது நடைமேடை வரை நிறுத்தப்படும். புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல 10, 11 ஆகிய நடைமேடைகளில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 5 முதல் சேலம்-சென்னை எழும்பூா் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

பராமரிப்புப் பணி: சென்னை-மங்களூரு ரயில் பகுதியாக ரத்து
எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: 11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்

திருநெல்வேலி - எழும்பூா் இடையே ஜூலை 9 முதல் சிறப்பு வாராந்திர ரயில்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


