மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

எழும்பூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணி: 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிக்காக 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிக்காக 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் ரூ.840 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தற்போது 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விரைவு ரயில்கள் இனி 6 முதல் 9-ஆவது நடைமேடை வரை நிறுத்தப்படும். புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல 10, 11 ஆகிய நடைமேடைகளில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.