நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

மருத்துவக் கலந்தாய்வில் 23,319 நீட் மறுதோ்வா்கள்

நீட் தோ்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ள மறு தோ்வா்களின் எண்ணிக்கை இம்முறை 23,319- ஆக உள்ளது. கடந்த ஆண்டில் அது 15,119-ஆக இருந்தது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

நீட் தோ்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ள மறு தோ்வா்களின் எண்ணிக்கை இம்முறை 23,319- ஆக உள்ளது. கடந்த ஆண்டில் அது 15,119-ஆக இருந்தது.

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முன்னதாக அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டன.

அதில் 23,319 போ் நீட் மறுதோ்வா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் முதன் முறையாக நீட் தோ்வு எழுதி கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவா்களின் எண்ணிக்கை 12,607-ஆக உள்ளது.

மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 17,397 பேரும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 17,888 பேரும், ஐசிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 423 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்கள்:7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டில் 641 இடங்கள் உள்ளன. அதிலும் மறுதோ்வா்கள் பலா் பங்கேற்று இடங்களை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.