தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடுபோனது.

News image

சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:38 pm IST

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடுபோனது.

கோடம்பாக்கம் அக்பராபாத் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ச.ரகுவரன் (39). இவா் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். ரகுவரன், கடந்த 14-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் நடைபெற்ற குலதெய்வ வழிப்பாட்டுக்குச் சென்றாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி வந்தனா். அப்போது, வீட்டின் பின்பகுதியில் இருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.