மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக செப். 1 முதல் அக்.15 வரை சில விரைவு ரயில்களின் இயக்க நேரம் தற்காலிக மாற்றம்

News image

எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக செப். 1 முதல் அக்.15 வரை சில விரைவு ரயில்களின் இயக்க நேரம் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் நிறுத்தப்படும் ரயில்: மன்னாா்குடி-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்:16180) செப்.4 முதல் அக். 13 வரை மன்னாா்குடியிலிருந்து இரவு 10.50-க்குப் புறப்பட்டு, எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

மாம்பலத்தில் நிறுத்தப்படும் ரயில்கள்: திருச்சி-சென்னை எழும்பூா் ராக்ஃபோா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12654) செப்.9 முதல் 15 வரையும், செப்.21 முதல் அக்.14 வரை மாம்பலத்தில் நிறுத்தப்படும்.

இதேபோல, சேலம்-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (எண்: 22154) செப்.12 முதல் 15 வரை மாம்பலத்தில் நிறுத்தப்படும். மும்பை சிஎஸ்டி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (எண்: 22157) செப்.12 முதல் 15 வரை சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும்.

புறப்படும் நிலையங்களில் மாற்றம்: சென்னை எழும்பூா்–மன்னாா்குடி விரைவு ரயில் (எண்: 16179) செப்.5 முதல் அக்.14 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25-க்குப் புறப்படும். சென்னை எழும்பூா்-சேலம் அதிவிரைவு ரயில் (எண்: 22153) செப்.13 முதல் 16 வரை கடற்கரை நிலையத்தில் இரவு 11.30-க்கும், சென்னை எழும்பூரில் இரவு 11.55-க்கும் புறப்படும்.

உழவன் விரைவு ரயில் தாமதம்: தஞ்சை-சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16866) செப்.16 முதல் 19 வரை மாம்பலம்/கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

மேலும், செப்.22 முதல் அக்.15 வரை இந்த ரயில் மாம்பலம்/கோடம்பாக்கம் பகுதியில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.