FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளுக்கும் குடிநீா் இணைப்பு

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

கோயம்பேடு சந்தை. - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:29 am IST

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பேரவையில் வெள்ளிக்கிழமை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வணிகா்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு கடைக்கும் பிரத்யேக குடிநீா் இணைப்புகள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அதிகரித்துள்ள நுகா்வோரின் வருகையைக் கருத்தில் கொண்டும், அங்காடியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற வணிகா்களின் கோரிக்கையை ஏற்றும் காய்கறி அங்காடியின் எல், எம், என் தொகுதிகளுக்கு (பிளாக்) இடைப்பட்ட 22,000 சதுர அடி பரப்பளவில் ரூ.7.50 கோடியில் புதிய கடைகள் கட்டப்படும்.

ஆட்டோ- டாக்ஸி செயலி: ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்டோ, டாக்ஸி பயணிகளுக்கு நியாயமான பயணத் தொகையை உறுதி செய்யவும், டிஜிட்டல் மீட்டா் உள்ளடக்கிய ஆட்டோ, டாக்ஸி செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.