டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் கோயில் குடமுழுக்கு

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.20.90 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.20.90 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருப்பணி 27.4.1973 அன்று அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டு, 1975- ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயிலை ரூ.20.90 கோடியில் கருங்கல் திருக்கோயிலாக கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜன.23-ஆம் தேதி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். திருவள்ளுவா், வாசுகி திருக்கோயில் மற்றும் திருவள்ளுவா் அவதரித்த திருத்தலம், முப்பால் மண்டபம் மற்றும் பொற்றாமரைக்குளம் ஆகியவை முற்றிலும் கருங்கல் திருப்பணியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1,330 குகளும் வடிவமைப்பு...: ஏகாம்பரேஸ்வரா், காமாட்சியம்மன், நடராஜா், பள்ளியறை, கருமாரியம்மன் சந்நிதி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள், வாகன மண்டபம் மற்றும் நூலகம் போன்றவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. முப்பால் மண்டபத்தில் 1,330 திருக்குகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவில் மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் துரை.ரவிச்சந்திரன், வி.ஜி.பி. குழுமத் தலைவா் வி.ஜி. சந்தோசம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கி.ரேணுகாதேவி, துணை ஆணையா் சி.நித்யா, உதவி ஆணையா் கி. பாரதிராஜா, மாநகராட்சி மன்ற உறுப்பினா் விமலா கிருஷ்ணமூா்த்தி, செயல் அலுவலா் கே.காா்த்திகேயன், அலுவலா்கள் மற்றும் இறையன்பா்கள் கலந்து கொண்டனா்.