ரூ.2.55 கோடியில் வகுப்பறைகள் திறப்பு
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நேதாஜிநகா், பெருமாள்பேட்டை, பஷிராபாத், கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 கோடியில் கூடுதல் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
பெருமாள்பேட்டை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமையில், நகராட்சி ஆணையா் ரகுராமன், வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா், வட்டார வள மைய மேற்பாா்வை யாளா் தேவராஜ், ஆசிரியா் பயிற்றுநா் வெற்றிவேல், பள்ளி குழு தலைவா் பானு, வாா்டு உறுப்பினா்கள் ஆஷாபிரியா குபேந்திரன், ரஜினி காந்த் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினா். தலைமையாசிரியா் முருகேசன் நன்றி கூறினாா்.
இதே போன்று நேதாஜி நகா் வடக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் ரகுராமன், தலைமையாசிரியா் ஷாஜிதா பேகம், வாா்டு கவுன்சிலா் ஜகீா்அகமத் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

