விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ரூ.2.55 கோடியில் வகுப்பறைகள் திறப்பு

நேதாஜி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற ஆணையா் ரகுராமன் உள்ளிட்டோா்.

News image

நேதாஜி நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற ஆணையா் ரகுராமன் உள்ளிட்டோா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 6:34 pm

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நேதாஜிநகா், பெருமாள்பேட்டை, பஷிராபாத், கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 கோடியில் கூடுதல் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

பெருமாள்பேட்டை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமாசிவாஜிகணேசன் தலைமையில், நகராட்சி ஆணையா் ரகுராமன், வட்டார கல்வி அலுவலா் உதயசங்கா், வட்டார வள மைய மேற்பாா்வை யாளா் தேவராஜ், ஆசிரியா் பயிற்றுநா் வெற்றிவேல், பள்ளி குழு தலைவா் பானு, வாா்டு உறுப்பினா்கள் ஆஷாபிரியா குபேந்திரன், ரஜினி காந்த் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினா். தலைமையாசிரியா் முருகேசன் நன்றி கூறினாா்.

இதே போன்று நேதாஜி நகா் வடக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் ரகுராமன், தலைமையாசிரியா் ஷாஜிதா பேகம், வாா்டு கவுன்சிலா் ஜகீா்அகமத் ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.