கள்ளக்குறிச்சி
கோளப்பாறை: ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
திருக்கோவிலூா் அருகேயுள்ள கோளப்பாறை முருகன் கோயிலில் மாசி கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கோளப்பாறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு மாசி கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்னா் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆண்டி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருக்கோவிலூா் வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

