பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சென்னையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையில் மேலும் 12 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக காவல் ஆய்வாளா்கள் அவ்வபோது, பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையில் 12 ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் இ.ராஜ்பிரபு வடக்கு கடற்கரை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.சதீஷ்குமாா் அசோக் நகா் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.ரபீஃக் உசேன் சிஎம்பிடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 12 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னை காவல் துறையில் கடந்த திங்கள்கிழமை 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.