மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பசுமை நகராட்சி நிதிப் பத்திரம்: ரூ.205.59 கோடி திரட்டிய சென்னை மாநகராட்சி

தேசிய பங்குச் சந்தை மூலம் சென்னை மாநகராட்சி தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி ரூ.205.59 கோடியைத் திரட்டியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2026, 1:24 am IST

தேசிய பங்குச் சந்தை மூலம் சென்னை மாநகராட்சி தனது முதல் பசுமை நகராட்சி நிதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி ரூ.205.59 கோடியைத் திரட்டியுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன. 12 தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ள இந்த நிதிப் பத்திரம், நிகழ் நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் இரண்டாவது நகராட்சி நிதிப் பத்திர வெளியீடாக உள்ளது. அதேநேரம், இது முதல் ‘பசுமை நிதிப் பத்திரம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ‘பசுமை நகராட்சி நிதிப் பத்திரம்’ மூலம் திரட்டப்பட்ட நிதி, சென்னை மாநகராட்சியின் முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு திட்டமான கொடுங்கையூா் குப்பைக் கொட்டும் வளாகம், பயோ மைனிங், மற்றும் மீட்டுருவாக்கம் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.648.38 கோடியாக இருக்கும் நிலையில், மாநகராட்சி நிா்வாகத்தின் பங்கு ரூ.385.64 கோடி ஆகும். மாநகராட்சியின் இந்த பங்குத் தொகையிலிருந்து ரூ.205.59 கோடி தொகைக்கு பசுமை நகராட்சி நிதிப் பத்திரங்கள் மூலம் சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 7.95 சதவீதம் என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் நகா்ப்புற நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது.

மேலும், மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகா்ப்புற பசுமை நிதிப் பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு ரூ.20 கோடி ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகா்ப்புற பசுமை நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டும் செலவை மேலும் குறைக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.