தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மைக் மீது லாரி மோதல்: ஐடி ஊழியா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், விஜிபி சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் காா்த்திக் செந்தில்குமாா் (45). இவா், பள்ளிக்கரணையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பரும், மென்பொறியாளருமான ராஜகீழ்பாக்கத்தைச் சோ்ந்த எல்க்கனாக் ஜெப சிங் (32) என்பவருடன் திங்கள்கிழமை இரவு பைக்கில் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கோவிலம்பாக்கம் நோக்கி சென்றாா். மேடவாக்கம் பெல் நகா் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தன. பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த காா்த்திக் செந்தில்குமாா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் மேடவாக்கத்தை சோ்ந்த கருப்பைய்யா(50) என்பவரை கைது செய்தனா்.