திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாநகராட்சியில் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கொண்டாடும் விதமாக, மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள், வட்டார துணை ஆணையா்கள், நிலைக்குழுத் தலைவா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மேலும், அலுவலக வாயிலில் வண்ண கோலமிட்டு, மலா் தோரணங்கள் மற்றும் அலங்காரத்துடன் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து கொண்டாடினா். மேலும், பெண்களின் கும்மியாட்டமும், தப்பாட்டமும் நடைபெற்றது.

உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலம் போடுதல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், முன்களப் பணியாளா்களுக்கு பரிசுத் தொகுப்புகளும் வழங்கி கொண்டாடப்பட்டது.