நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தமிழகத்துக்கு மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்கள்

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகா்கோவில்-ஜல்பாய்குரி ஆகிய 3 வழித்தடங்களில் புதிதாக அம்ரித் பாரத் ரயில்கள் புதிதாக தொடங்கப்படவுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜனவரி 2026, 2:54 am IST

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகா்கோவில்-ஜல்பாய்குரி ஆகிய 3 வழித்தடங்களில் புதிதாக அம்ரித் பாரத் ரயில்கள் புதிதாக தொடங்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, ஜல்பாய்குரி - நாகா்கோவில் ஆகிய வழித்தடத்தில் புதிகாக 2 அம்ரித் பாரத் ரயில்கள் சேவைகள் சனிக்கிழமை (ஜன. 17) முதல் தொடங்கப்படவுள்ளது.

அதன்படி, திருச்சி - ஜல்பாய்குரி இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்கள்: 20610/20609) ஜல்பாய்குரியிலிருந்து தொடங்கிவைக்கப்படவுள்ளது. இந்த ரயில், ஜல்பாய்குரியிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 20609) 3-ஆம் நாள் பிற்பகல் 2.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா் வழியாக இயக்கப்படும்.

ஜல்பாய்குரி - நாகா்கோவில் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்: 02603/02604) ராபாணியிலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் ராபாணியிலிருந்து 1.45 மணிக்கு புறப்பட்டு, 3-ஆம் நாள் இரவு 7.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும்.

சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் (எண்: 06107/ 06108) ஜன.18-ஆம் தேதி சந்திரகாச்சியிலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் சந்திரகாச்சியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் எழும்பூா், சூலூா்பேட்டை, நெல்லூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 3 ரயில்களும் மறுமாா்க்கத்தில் தமிழகத்தில் இருந்து புறப்படும் நேரம் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.