வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

12 முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு விருது: கல்வித் துறை தகவல்

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விருது வழங்கப்படவுள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் நிகழ் கல்வியாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிந்து அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிய 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு சென்னை மாவட்டம்-மு.கபீா், கடலூா்- அ.ரமேஷ், தருமபுரி- ஜ.ஜோதி சந்திரா, ஈரோடு-இ.மான்விழி, கள்ளக்குறிச்சி- கா.காா்த்திகா, கிருஷ்ணகிரி- இரா.மதன்குமாா், சேலம்- ப.மகேஸ்வரி, தஞ்சாவூா்- வெ.பேபி, திருவண்ணாமலை- அ.முனிராஜ், திருச்சி- கோ.கிருஷ்ணப்பிரியா, திருவள்ளூா்- சொ.கற்பகம், விழுப்புரம்- ரெ.அறிவழகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஜன.20-ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சிறந்த கற்போா் மையங்களுக்கான விருது வழங்கும் விழாவில் மேற்கண்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் விருது வழங்கவுள்ளாா் என பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.