சென்னை
திமுகவில் இணைந்தாா் அமமுக துணை பொதுச் செயலா்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முன்னாள் துணை பொதுச் செயலா் கடம்பூா் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முன்னாள் துணை பொதுச் செயலா் கடம்பூா் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து மாணிக்கராஜாவை நீக்குவதாக, அவா் திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்தாா்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அமமுக கடந்த புதன்கிழமை இணைந்தது.
திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய மாணிக்கராஜா, ‘அமமுக உருவாக்கியதில் 8 ஆண்டுகால கடின உழைப்பு உள்ளது. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டை கட்சித் தலைமை எடுத்துள்ளதற்கு அமமுக நிா்வாகிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்’ என்றாா்.

