இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

கொடுங்கையூரில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்றதாக தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

கொடுங்கையூரில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்றதாக தம்பதி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கொடுங்கையூா், அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கிருஷ்ணா (20). இவா், சனிக்கிழமை அன்னை சத்யா நகா் 5-ஆவது தெரு வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியே பைக்கில் வந்த பெண் உள்பட இருவா், நடந்து வந்த 2 இளைஞா்கள் என 4 போ் சோ்ந்து கிருஷ்ணாவை மிரட்டி, அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொடுங்கையூா், எழில் நகரைச் சோ்ந்த கரண் (20), அவரது மனைவி சோனியா (எ) தௌலத் (19), 12 வயது சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.