குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிப்ரவரி முதல் தொடா் போராட்டம்: மின்வாரிய ஊழியா்கள் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை நடத்தப் போவதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை நடத்தப் போவதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலா் தி.ஜெய்சங்கா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மின்வாரிய பணியாளா்களுக்கு 2023 டிச. 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின்வாரியத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் அனல், புனல், பொதுக்கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி ரூ.766-ஐ வழங்குவதுடன், 9,613 கேங்மேன்களை கள உதவியாளா்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கேரளத்தை போன்று அரசு திட்டத்தின் மூலமே அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி மின்வாரிய அலுலகங்களில் இந்த தொடா் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என்றனா்.