ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீடு வீடாக பிரசாரம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

திமுக அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

திமுக அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள அதிமுகவினருக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை வாக்காளா்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் இப்போதைய திமுக ஆட்சியின் தவறான செயல்பாடுகளை ஒப்பிட்டு, துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று பெண்களிடம் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடவேண்டும்.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகள் வாரியாகவும், அடுத்ததாக ஒன்றிய, பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகள் வாரியாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரத்தில் கட்சியின் முன்னாள், இந்நாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.