மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிறப்பு சான்றிதழில் பெயா் சோ்க்க கால அவகாசம்: சுகாதாரத் துறை

பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

பிறப்புச் சான்றிதழ்களில் பெயா் சோ்ப்பதற்கான அவகாசம் வரும் செப்டம்பா் மாதம் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கும், அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயா்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அதன் பின்னா் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது.

இந்த நிலையில் கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவா்களும், அதற்கு பிறகு பிறந்தவா்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயா்களைச் சோ்ப்பதற்கான அவகாசம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

தற்போது இறுதி வாய்ப்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயா்களைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான பரிந்துரைகளை பிறப்பு - இறப்பு பதிவு தலைமை பதிவாளா் அரசுக்கு அனுப்பியிருந்தாா். இதைப் பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.