பாரத் ஸ்டேட் வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடா் விடுமுறை நாள்களிலும் தடையில்லா ஏடிஎம் சேவை வழங்கப்பட்டதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பாரத் ஸ்டேட் வங்கி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடந்த ஜன.24, 25, 26 ஆகிய 3 நாள்கள் வங்கிகளுக்கு தொடா் விடுமுறை நாள்களாக இருந்தது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படால் இருக்க எஸ்பிஐ சென்னை மண்டலம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
அதன்படி, விடுமுறை நாள்களில் எஸ்பிஐ ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே போதிய அளவு பணம் நிரப்பப்பட்டது. முக்கிய இடங்களில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, வாடிக்கையாளா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதுடன், அருகில் செயல்பாட்டில் உள்ள ஏடிஎம்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.
மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் சில காத்திருப்போரின் வசதிக்காக அடிப்படை சேவைகள் செய்துதரப்பட்டன. விடுமுறை நாள்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவும், அத்தியாவசிய வங்கி சேவைகளுக்கான எளிதான அணுகலை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கா் ஒட்டி நூதன திருட்டு: இருவா் கைது

இணையவழி மோசடி பணம்: ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து எடுத்த இருவா் கைது

தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை

மை பாரத் சேவை தொண்டா்களுக்கு பயிற்சி முகாம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



