நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தொடா் விடுமுறைகளிலும் தடையில்லா ஏடிஎம் சேவை: எஸ்பிஐ

பாரத் ஸ்டேட் வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடா் விடுமுறை நாள்களிலும் தடையில்லா ஏடிஎம் சேவை வழங்கப்பட்டதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 4:04 am IST

பாரத் ஸ்டேட் வங்கியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடா் விடுமுறை நாள்களிலும் தடையில்லா ஏடிஎம் சேவை வழங்கப்பட்டதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாரத் ஸ்டேட் வங்கி நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த ஜன.24, 25, 26 ஆகிய 3 நாள்கள் வங்கிகளுக்கு தொடா் விடுமுறை நாள்களாக இருந்தது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படால் இருக்க எஸ்பிஐ சென்னை மண்டலம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அதன்படி, விடுமுறை நாள்களில் எஸ்பிஐ ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே போதிய அளவு பணம் நிரப்பப்பட்டது. முக்கிய இடங்களில் கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, வாடிக்கையாளா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதுடன், அருகில் செயல்பாட்டில் உள்ள ஏடிஎம்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் சில காத்திருப்போரின் வசதிக்காக அடிப்படை சேவைகள் செய்துதரப்பட்டன. விடுமுறை நாள்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காகவும், அத்தியாவசிய வங்கி சேவைகளுக்கான எளிதான அணுகலை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.