டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

பெருநகர சென்னை மாநகராட்சி.

Updated On :3 ஜூலை 2026, 6:48 am IST

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சி பிரதான வரி வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சொத்து உரிமையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவை சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.