கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வல்சத் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, வல்சத் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (09030) வரும் ஜூலை 3 ஆம் தேதியும், வேளாங்கண்ணி - தானு சாலை சிறப்பு ரயிலானது (09029) வரும் ஜூலை 6 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளன.
20 படுக்கைப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது வல்சத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு தானு சாலை, பல்காா், வாசை சாலை, பன்வெல், லோனாவாலா, புனே, டவுந்த், சோலாப்பூா், கலபுா்கி, வாடி, யாத்கிா், கிருஷ்ணா, ராய்ச்சூா், மந்த்ராலயம், அதோனி, குண்டக்கல், கூட்டி, தாடிபத்ரி, யர்ரகுண்ட்லா, கடப்பா, ராசம்பேட், ரேனிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடையும். மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணியிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தானு சாலைக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









