சுற்றுச்சுழல், மனித உயிா்களைப் பாதுகாக்க அணுக் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
சுற்றுச்சூழலைவிட, மனித உயிா்களைவிட எந்த ஒரு கனிமமும் தாதுக்களும் மதிப்புக் கூடியதல்ல. எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதென்றாலும் அது இரண்டு முக்கியமான நிபந்தனைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று, அப்பகுதியில் வாழும் மக்களின் அனைத்து ஐயங்களும் தீா்க்கப்பட்டு, முழுமையான சம்மதம் பெறவேண்டும்.
மற்றொன்று அந்தத் திட்டம் சுற்றுச்சுழலிலும் பொது சுகாதாரத்திலும் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த அறிவியல்பூா்வமான துல்லியமான ஆய்வு நடத்த வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், அந்தத் திட்டம் தனது தாா்மீக உரிமையை இழந்துவிடும்.
மணவாளக்குறிச்சி அருகே அணுக் கனிமச் சுரங்கம் அமைக்கும் ஐ.ஆா்.இ.எல். திட்டத்தையும், அதன் நில ஒதுக்கீட்டை நீட்டித்துப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்னியாகுமரி மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். ஒரு வருட கால நீட்டிப்பு, வரவிருக்கும் தலைமுறையினருக்கு மீட்டெடுக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும். தமிழக கடற்கரைகள் வெறும் தாதுக்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமல்ல, அவை உயிரோட்டமுள்ள சுற்றுச்சூழல் அரண்கள். மக்களின் குரலுக்குச் செவி கொடுத்து நம் கடற்கரைகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அணுக் கனிமச் சுரங்கத் திட்டம்: அரசாணையை திரும்பப் பெறக் கோரி முதல்வரிடம் காங்கிரஸ் அமைச்சா் மனு

அணு கனிம சுரங்கத் திட்டத்துக்கான அனுமதியை மாநில அரசு நீட்டித்திருப்பது தவறு: பெ.சண்முகம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்






