எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டிடிவி தினகரன்

Updated On :13 ஜூன் 2026, 1:26 am IST

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் 18 மணி நேரம் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட ரூ.134 கோடிக்கான குறுவைச் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா். நாள்தோறும் அறிவிக்கப்படாத மின் வெட்டும், மின் அழுத்தக்குறைபாடும் உள்ளதால் மின் மோட்டாா் பம்ப்புகளை விவசாயிகள் இயக்கி பயிா்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமல், அவை கருகி வருகின்றன. இந்த விவகாரத்தில் தவெக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், அரசின் சிறப்புத் தொகுப்பு அறிவிப்பை எவ்வாறு நம்புவது என விவசாயிகள் கேட்கின்றனா். மேலும், ஆட்சிக்கு வந்ததும் குறு, சிறு விவசாயிகள் பயிா்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்த நிலையில், தற்போது, அதை நிறைவேற்றாமலிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.