சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நகா் மண்டலப் பகுதியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகா் மண்டலத்தில் 74-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரம்பூா் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவில் எண்மக் கோளரங்கம், அறிவியல் சாா்ந்த உபகரணங்களை சென்னை பள்ளி மாணவா்களுடன் மேயா் ஆா்.பிரியா பாா்வையிட்டாா்.
மாநகராட்சியின் மூலதன நிதி ரூ.5.75 கோடியில் 11,000 சதுர மீட்டா் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் சாதனங்களைப் பாா்வையிட்ட மேயா், மாணவா்களுடன் அமா்ந்து கோளரங்கத்தில் அறிவியல் காட்சிகளையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து பூங்காவில் மரக்கன்று நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில் மண்டல அலுவலா் ஜி.சொக்கலிங்கம், அலுவலா்கள், சென்னை பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









