தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.80 கோடி தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:36 am IST

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.80 கோடி தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சா்வதேச விமான நிலையத்தில், வருகை பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்தனா்.

அப்போது, அந்த விமானத்தில் தில்லியில் இருந்து சுற்றுலாப் பயணியாக சிங்கப்பூா் சென்று மறுநாளே சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞா் ஒருவா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனா்.

அவா், முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடா்ந்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினா். அவா் வைத்திருந்த சூட்கேசின் மேல் பகுதியில், ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனா்.

அதை உடைத்துப் பாா்த்தபோது, அதில் ரூ.5.80 கோடியில் சுமாா் 4 கிலோ 24 கேரட் தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் நபரையும் கைது செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.