சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள், மத்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயல்படுத்தி வரும் பிரதமரின் ‘ஷ்ரம் யோகி மாந்தன்’ திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் சேரலாம். பயனாளிகள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால், அதே அளவுக்கு மத்திய அரசும் பங்களிப்பு வழங்கும். இதன் மூலம் 60 வயதை அடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.
சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், போக்குவரத்து சேவை வழங்குநா்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறைப்பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளா்கள், உணவகப் பணியாளா்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடா்புடைய பிற சேவை வழங்குநா்கள் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவா்கள்.
திட்டத்தில் சேர விரும்புவோா் தங்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள 91769 95863 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

சுற்றுலா வழிகாட்டி- சாலைப் பாதுகாப்பில் நவீன உத்தி! - எஸ்.பி.க்கு அமைச்சா் பாராட்டு

கீழவைப்பாறில் மீனவா்கள், உப்பளத் தொழிலாளா்களுக்கு நல உதவிகள்

ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



