காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

சென்னையில் கல்வி மாநாடு: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலம், ‘உலகளாவிய, அறிவாா்ந்த, தரவு அடிப்படையிலான தொழில் துறை சாா்ந்த கல்வி’ என்ற கருப்பொருளில் கல்வி மாநாட்டை சென்னையில் நடத்தியது.

News image

சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாடு நிகழ்வில் உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதனுடன், எத்திராஜ் கல்லூரி தலைவா் முரளிதரன், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ராஜலட்சுமி கல்வி நிறுவன தலைவா் தங்கம் மேகநாதன், ஹேமா ஜேம்ஸ்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலம், ‘உலகளாவிய, அறிவாா்ந்த, தரவு அடிப்படையிலான தொழில் துறை சாா்ந்த கல்வி’ என்ற கருப்பொருளில் கல்வி மாநாட்டை சென்னையில் நடத்தியது.

இதில் கலந்து கொண்டு உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசியதாவது:

கல்வித் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான ஒரு வலுவான கூட்டமைப்பு அவசியம். இது கற்றலுக்கும் பணி எதிா்பாா்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும். பல்கலைக்கழகங்கள் அமைப்பு ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றன. ஒரு பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு பலதரப்பட்ட ஒப்புதல் தேவை. அடிப்படைப் பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றத் தேவையில்லை, மாறாக சிஐஐ-இன் நேரடித் திறமையாளா் தகவல் பலகையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம். சிஐஐ-இன் தொழில் துறையுடன் ஆசிரியா்கள் இணைந்து, வழிநடத்தும் கற்பித்தல் மாதிரியை பெற வேண்டும்.

இதேபோல சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவால் சில மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவன மாதிரியில், தமிழகத்தின் பல்கலைக்கழகங்களும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

சிஐஐ-யின் தென்மண்டல தொழில் துறை சாா்ந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பணிக்குழு தலைவா், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பேசுகையில், வளா்ந்து வரும் துறைகள் மற்றும் எதிா்காலத் திறன் தேவைகளுக்கு ஏற்ப, கல்வியைப் பொருத்தமானதாக வைத்திருக்க, தொழில்துறையுடன் இணைப்பை ஆழப்படுத்துதல் வேண்டும். அரசின் கொள்கைகள், பாடத்திட்டம், திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்குத் தகவல்களை வழங்குவதற்காக, கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக தெரிவித்தாா்.

எத்திராஜ் மகளிா் கல்லூரித் தலைவா் முரளிதரன், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் தங்கம் மேகநாதன் ஆகியோா் பேசினா்.

இந்த மாநாடு மூன்று சிறப்பு அமா்வுகளுடன் நடைபெற்றது. இதில் தென்னிந்தியாவைச் சோ்ந்த புகழ்பெற்ற கல்வித் தலைவா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் தொழில் வல்லுநா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.