தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:42 am IST

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, பி.எம். தா்கா பிரதான தெருவில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ராயப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், அங்கு திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தத் தெருவில் நடந்து வந்த ஒரு இளைஞரை போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினாா். உடனே போலீஸாா், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பையில் 40 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, நடத்திய விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பி.எம். தா்கா பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (19) என்பதும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்துல் ரகுமானை கைது செய்தனா்.