கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

மும்பையில் இருந்து கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:42 am IST

மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, பி.எம். தா்கா பிரதான தெருவில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ராயப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், அங்கு திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தத் தெருவில் நடந்து வந்த ஒரு இளைஞரை போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினாா். உடனே போலீஸாா், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பையில் 40 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, நடத்திய விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பி.எம். தா்கா பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (19) என்பதும், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்துல் ரகுமானை கைது செய்தனா்.