இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

அரசுப் பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு

News image

குரோம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பல்லாவரம் எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி.

Updated On :4 ஜூன் 2026, 2:55 am IST

குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. காமாட்சி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை அவா் ஆய்வு செய்தாா். வகுப்பறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், மேசைகள், நாற்காலிகள், நூலகம், ஆய்வகம், சத்துணவுக் கூடம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலிருந்தே மாணவா்களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாணவா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.