40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அரசுப் பள்ளிகளில் எம்எல்ஏ ஆய்வு

News image

குரோம்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பல்லாவரம் எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி.

Updated On :4 ஜூன் 2026, 2:55 am IST

குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூா் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. காமாட்சி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை அவா் ஆய்வு செய்தாா். வகுப்பறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், மேசைகள், நாற்காலிகள், நூலகம், ஆய்வகம், சத்துணவுக் கூடம் ஆகியவை தூய்மை செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தாா்.

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலிருந்தே மாணவா்களுக்கு அரசு வழங்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மாணவா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.