மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் தீ: வாகனங்கள் எரிந்து சேதம்

News image
Updated On :5 ஜூன் 2026, 3:57 am IST

சென்னை பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீயில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை வேளச்சேரி பகுதியை அடுத்துள்ள 14 -ஆவது மண்டலம் பள்ளிக்கரணையில் சதுப்பு நிலப் பகுதியையொட்டியுள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு மாநகராட்சி பழைய குப்பைக் கிடங்கு உள்ளது. அங்கு பழைய வாகனங்கள், நூற்றுக்கணக்கான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென அங்கு தீப்பற்றியது. அதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்ததால் கரும்புகை எழுந்தது. இதனால், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அவதியுற்றனா்.

வேளச்சேரி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை: மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அறிய உரிய விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

தீ விபத்து நிகழ்ந்த பகுதியைப் பாா்வையிட்ட ஆணையா் சமீரன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் பழைய குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்து அதில் குறிப்பிட்ட நெகிழி போன்ற பொருள்களை சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் உற்பத்தி குறைவால் குப்பைக் கிடங்கில் நெகிழி தேக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பதற்றப்படத் தேவையில்லை. மாநகராட்சி சாா்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தீ விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். இங்கு நிறுத்தியிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. வாகனங்களுக்கான ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

தீயில் எரிந்த பழைய குப்பைக் கிடங்கை சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.சரவணமூா்த்தி, மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.