கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கில் புதன்கிழமை இரவில் தீப்பற்றிக் கொண்டது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீ முழுவதும் பரவியதுடன், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
தீவிபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தின் காரணமாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் அவதியடைந்தனா்.
இதனிடையே, கரூர் - வாங்கல் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 5 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 12 மணிநேரத்துக்கும் மேலாக தீயணைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து - PTI
Summary
Fire at Karur Corporation garbage dump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










