தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

3,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் 3,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:38 am IST

சென்னை எம்ஜிஆா் நகரில் 3,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

மேற்கு ஜாபா்கான்பேட்டை திருநகா் பகுதியில் சிலா் போதை மாத்திரை, கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா், அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையையும் சோதனையிட்டனா்.

இதில், அந்தப் பையில் 3,500 போதை மாத்திரைகள், ஒன்றே கால் கிலோ கஞ்சா இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

இதில், அவா்கள் பெசன்ட் நகா் அருகே உள்ள திடீா் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (23), எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பிரவீண்குமாா் (19) என்பது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.