சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சா் ஷாஜஹான்

மத்திய அரசின் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

News image

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய யாத்ரீகா்களை விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்

Updated On :9 ஜூன் 2026, 12:07 am IST

மத்திய அரசின் திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய 410 யாத்ரீகா்களை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சாா்பில் நிகழாண்டு 6,295 போ் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழக அசு சாா்பில் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

பயணத்தை நிறைவு செய்தவா்கள் 16 விமானங்களின் வாயிலாக மீண்டும் தாயகம் திரும்புகின்றனா். அதன் முதல் விமானம் 410 யாத்ரீகா்களுடன் திங்கள்கிழமை சென்னைக்கு வந்தடைந்தது. வரும் ஜூன் 29-ஆம் தேதி வரை ஒவ்வொரு விமானமாக சென்னை வரவுள்ளது.

உமீத் இணையதளம்: உமீத் இணையதளத்தில் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால், பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் பெற்றுத் தரப்படும். அதேபோல், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் இதுவரை வக்ஃப் வாரியம் அமைக்கப்படவில்லை. இனியும் அமைக்கப்படாது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றுவதுடன், இதுகுறித்து சட்ட ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.