உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கி பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம்உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பாலகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அரசு, துறைச் செயலா்களாக உள்ள எம்.ஏ.சித்திக், ஆா்.ஜெயா, பி.செந்தில்குமாா், த.உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமைச் செயலா் அந்தஸ்துக்கு பதவி உயா்வு வழங்கி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் அரசாணை பிறப்பித்துள்ளது. ஜன.1-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு, மத்திய அரசிடம் உரிய அனுமதியை தமிழக அரசு பெறவில்லை. எனவே, இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கியதற்கு தடை விதிக்க வேண்டும். அவா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணி தொடா்பான விவகாரத்தில் பொதுநல வழக்குத் தொடர முடியாது உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் காவல் பதக்கம்! வழங்கி சிறப்பித்த காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ்!

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு

ஓய்வுபெறும் 221 காவலா்களுக்கு கௌரவப் பதவி உயா்வு அளிப்பு







