வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :13 ஜூன் 2026, 2:32 am IST

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும் நடைமுறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வராக விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவி ஏற்றாா். அந்த நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக வந்தே மாதரம், தேசிய கீதம் பாடல்கள் பாடப்பட்டு, 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டன. இது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், இறுதியில் தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்யும் மரபு பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை நீா்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடலைப் பாடியே தொடங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன.28-ஆம் தேதி சுற்றறிக்கைப் பிறப்பித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழா்களின் உணா்வு, கலாசாரம் மற்றும் அடையாளமாக உள்ளது.

எனவே, வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிா்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலைத் தவிா்க்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கான தகுந்த நிா்வாக அறிவுறுத்தல்களைப் பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.