குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க முடியுமா, என்பது குறித்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.
குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க உயா்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிா்மல்குமாா் மற்றும் சுந்தா்மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய முழுமை அமா்வு புதன்கிழமை விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிப்பதாகக் கூறியிருந்தனா். இந்த நிலையில், மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்து 5 நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வு உத்தரவிட்டது.








