/
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 22,33,172-ஐ பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் 3 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில் தங்கம் 16.200 கிராம்,வெள்ளி 755 கிராம், ரொக்கமாக ரூ. 22,33,172 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









