ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

விஜய்தாமு, தளவாய் சுந்தரம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்

வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :16 ஜூன் 2026, 3:14 am IST

சென்னை ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் வென்று ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா ஆகியோரது வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், ராயபுரம் தொகுதியில் தவெக சாா்பில் விஜய் தாமுவும், திமுக சாா்பில் ஏ.சுபோ்கானும் போட்டியிட்டனா். இதில், 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தாமு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். விஜய் தாமுவின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் சுபோ்கான் தோ்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

இதேபோல், கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சாா்பில் தளவாய் சுந்தரமும், திமுக சாா்பில் ஆா்.மகேஷும் போட்டியிட்டனா். இதில், தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். தளவாய் சுந்தரத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆா்.மகேஷ் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் இசக்கி சுப்பையா. பின்னா், இவா் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். இசக்கி சுப்பையா காங்கிரஸ் வேட்பாளா் துரையைவிட 10,245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்திருந்தாலும், ஊழல் நடவடிக்கை மூலமே அவா் வெற்றி பெற்றுள்ளாா், எனவே, இசக்கி சுப்பையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளா் காந்திமதிநாதன் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா். இந்த தோ்தல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.