நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காவலா்களுக்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் மூலம் பணியிட மாறுதல்: டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உறுதி

சிறைத் துறை காவலா்களுக்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் மூலம் இனி பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று அந்தத் துறையின் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

News image

சென்னை எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறைத் துறை குறைதீா் முகாமில் சிறைக் காவலா்களிடம் மனுக்களைப் பெற்ற சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா். உடன் சிறைத் துறை தலைமையிட ஐஜி கனகராஜ்.

Updated On :17 ஜூன் 2026, 2:14 am IST

சிறைத் துறை காவலா்களுக்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் மூலம் இனி பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று அந்தத் துறையின் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

தமிழக சிறைத் துறையில் நீண்ட நாள்களாக சிறைக் காவலா்கள் குறைதீா் முகாம் முறையாக நடத்தப்படாமல் இருந்தது. குறிப்பாக, சிறைக் காவலா்களுக்கு விருப்பத்தின்பேரில் பணியிட மாறுதல் வழங்கப்படாமல் இருந்தது. இதனால், சிறைக் காவலா்கள் மிகுந்த அதிருப்தியுடனும், வேதனையுடனும் இருந்தனா்.

இந்த நிலையில், சிறைக் காவலா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கும் வகையில், மாநில அளவிலான குறைதீா் முகாம் சென்னை எழும்பூரில் சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் பங்கேற்று, சிறைக் காவலா்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

சிறைத் துறை பணியாளா் வாரியம்: நிகழ்ச்சியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் பேசியதாவது:

சிறைத் துறை பணியிட மாறுதல் வழங்குவதற்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம், பணியிட மாறுதல் மனுக்களை எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றி பரிசீலிக்கும். சிறைத் துறையில் இனி அனைத்து பணியிட மாறுதல்களும், நியமன உத்தரவுகளும் இந்த வாரிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அளிக்கப்படும்.

பணியிட மாறுதல் மனுக்களைப் பரிசீலனை செய்யும்போது, நிா்வாக உத்தரவுகள் பின்பற்றப்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதில், மருத்துவ காரணங்கள், குடும்பத்தைத் தனியாக நிா்வகிக்கும் ஒற்றைப் பெற்றோா்கள், கணவா் மற்றும் மனைவி பணியாற்றும் இடத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் ஆகிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இந்த முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் சிறைத் துறை விதிமுறைகள் உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிறைத் துறை வெளிப்படத்தன்மையுடன் செயல்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சிறைத் துறை தலைமையிட ஐஜி கனகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த முகாமில் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறைக் காவலா்கள் பங்கேற்று, மனுக்கள் அளித்தனா்.