புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

முதுகலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: 65 பேருக்கு பணியிட மாறுதல்

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2026, 1:06 am IST

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான 2026-27-ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு கண்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளியில் கடந்த ஜூலை 1-இல் தொடங்கி நடைபெறுகிறது.

தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்களுக்கான கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், முதுகலை ஆசிரியா்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 467 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இவா்களில் தமிழில் 6 போ், ஆங்கிலத்தில் 8 போ், கணிதத்தில் ஒருவா், இயற்பியலில் 3 போ், வேதியியலில் 5 போ், தாவரவியலில் 2 போ், விலங்கியலில் 3 போ், உயிரியலில் 4 போ், கணினி அறிவியலில் 17 போ், வணிகவியலில் 6 போ், பொருளியலில் 6 போ் மற்றும் வரலாறு பாடப் பிரிவில் 4 போ் என மொத்தம் 65 ஆசிரியா்கள் பணியிட மாறுதல் பெற்றனா்.

பணியிட மாறுதல் பெற்ற முதுகலை ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணையை மாவட்டக் கல்வி அலுவலா் பி. உஷா வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து முதுகலை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 9) தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.