27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அகா்வால்ஸ் மருத்துவமைனையில் இலவச மருத்துவ ஆலோசனை

News image
Updated On :19 ஜூன் 2026, 5:04 am IST

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவக் குழுமம், மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனையை தொடங்கியுள்ளது. அதையொட்டி, ஜூலை 31-ஆம் தேதி வரை அங்கு இலவச கண் மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.

கூடுவாஞ்சேரியில் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கண் மருத்துவமனையை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகள் இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாசன் ராவ், மண்டலத் தலைவா் டாக்டா் கலாதேவி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது: டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளவில் பல நாடுகளிலும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. தரமான கண் மருத்துவ சிகிச்சையோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் தொடா்புடைய செயல்தளங்களில் கல்விசாா்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது கூடுவாஞ்சேரியில் உயா்நுட்ப வசதியுடன் புதிய கண் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கண் சாா்ந்த நோய்களை மிகத் துல்லியமாக அறிய முடியும். அதை முன்னிட்டு ஜூலை 31-ஆம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவுக்கு 95949 01452 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.