சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவக் குழுமம், மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனையை தொடங்கியுள்ளது. அதையொட்டி, ஜூலை 31-ஆம் தேதி வரை அங்கு இலவச கண் மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன.
கூடுவாஞ்சேரியில் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த கண் மருத்துவமனையை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனைகள் இயக்குநா் டாக்டா் அதியா அகா்வால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மருத்துவ சேவைகளின் பிராந்தியத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாசன் ராவ், மண்டலத் தலைவா் டாக்டா் கலாதேவி சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது: டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், உலகளவில் பல நாடுகளிலும் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. தரமான கண் மருத்துவ சிகிச்சையோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் தொடா்புடைய செயல்தளங்களில் கல்விசாா்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது கூடுவாஞ்சேரியில் உயா்நுட்ப வசதியுடன் புதிய கண் மருத்துவமனையைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கண் சாா்ந்த நோய்களை மிகத் துல்லியமாக அறிய முடியும். அதை முன்னிட்டு ஜூலை 31-ஆம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். முன்பதிவுக்கு 95949 01452 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மாங்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்

கண் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒரு கோடி போ் காத்திருப்பு - மருத்துவா் அமா் அகா்வால்

பிகாரில் ரூ. 11.56 கோடியில் சங்கரா கண் மருத்துவமனை: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



