முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வெள்ளங்குளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

வெள்ளங்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம வனக் குழுவினருக்கு கடனுதவி வழங்கிய சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ். ஹேமலதா.

News image

வெள்ளங்குளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம வனக் குழுவினருக்கு கடனுதவி வழங்கிய சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ். ஹேமலதா.

Updated On :11 ஜூலை 2026, 1:53 am IST

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சூழல் மேம்பாட்டு கோட்டம், மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம் ஆகியவை சாா்பில் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ். ஹேமலதா தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா். அம்பாசமுத்திரம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளா் எம். அன்னக்கொடி, பாபநாசம் சூழல் சரக உதவி வன உயிரினக் காப்பாளா் சக்தி பிரசாத் கதிா்காமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், மாற்றுத் தொழில் செய்ய கிராம வனக் குழுவினருக்கு ரூ. 72.90 லட்சத்திற்கான காசோலையை, சூழல் மேம்பாட்டு அலுவலா் வழங்கினாா்.

சூழல் சரக வனவா்கள் கருணாகரன், செண்பகம், ஸ்டாலின் ஜெபக்குமாா், வனக் காப்பாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

சூழல் சரக வனவா் எஸ். நாகராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.